சரி நம்ம இப்ப கதைக்கு வருவோம். கடந்த ஆறு மாதங்களாய் நான் சவூதி அரேபியாவில் இருக்கிறேன். நாங்க ரூம்லேயே சமையல் செய்து சாப்பிடுவோம். என்றாவது சமையல் போர் அடிச்சுதுனா வெளியில் சென்று சாப்பிடுவோம். இப்படியே நம்ம பொளப்பு போய்கிட்டு இருக்கும் போது ஆபிசுல நம்ம கூட வேலை பாக்குற நண்பர் ஒருவர் எங்கள் ரூம்முக்கு வந்தார். அவரிடம் பேசிகிட்டு இருக்கும் போது மீன் சாப்பாட்டை பற்றி பேச்சு வந்தது. அவரு உடனே எங்களிடம், "நாம இருக்கிற இந்த ஏரியா மீன் சாப்பாட்டிற்கு ரெம்ப பேமஸ்" உங்களுக்கு தெரியுமா? என்றார்.
நான் அவரிடம் அப்படி என்ன ஸ்பெசல் நாங்கள் கேள்வி படவில்லை என்று சொன்னேன், அப்ப இன்னைக்கு நைட்டு நாம எல்லோரும் மீன் சாப்பிட போகிறோம் என்று அந்த நண்பர் கூறினார். சரி போகலாம் என்று சொல்லி விட்டு, அவரிடம் எப்படி பிரிப்பேர் பண்ணுவார்கள் என்று கேட்டேன். வெறும் உப்புதான் போடுவார்கள் வேற எதுவுமே இருக்காது அப்படியே ப்ரை பண்ணி தருவார்கள் என்று சொன்னார்.
எனக்கு அடி வயிறு கலங்க தொடங்கிடுச்சு, ஆஹா வசமா மாட்டிடோம்டா இன்னைக்கு நைட்டு நாம கொலை பட்டினிதான் என்று. நான் வெளியில் மீன் அதிகமாக சாப்பிடாதற்கு காரணம் அதன் பிரிப்பரேசன் தான், மசாலா எல்லாம் சரியாக சேர்க்கவில்லை என்றாலோ, அல்லது சரியாக மீனை கிளீன் செய்யவில்லை என்றாலோ, அல்லது மீன் அழுகிவிட்டாலோ அதை எவரும் சாப்பிட முடியாது. இப்படி பல லோக்கள் இருப்பதினால் தான் மீனை அந்த அளவு விரும்பி வெளியில் சாப்பிடுவது இல்லை.
வாங்கி தருகிறேன் என்று சொல்லுகிற நண்பரிடம் நாங்கள் சாப்பிட வரவில்லை என்று சொல்ல முடியுமா?.. சரி சமாளிப்போம் என்று மனதில் நினைத்துக் கொண்டு என்னை போலவே முழித்து கொண்டிருந்த நம்ம ரூம் மேட்கிட்ட போய் சைலண்டா "மீன் சாப்பிடுவது போல் சாப்பிட்டு விட்டு அவரை கொண்டு போய் ரூம்ல விட்டுவிட்டு நாம தனியா போய் நம்ம மலையாளி சேட்டா கடையில் புரோட்டா சாப்பிட்டு விடலாம்" என்று கூறினேன். ஆஹா அருமையான யோசனை என்று அவரும் தலையை ஆட்டினார்.
கடைக்கும் போயாச்சி. கடைக்காரர் நம்ம நண்பருக்கு பிரெண்டு போல.. இவரை பார்த்தவுடன் அவன் சிரிச்சிட்டே இரண்டு பெரிய முழு மீனை எடுத்துக் கொண்டு வந்தான். நான் அவரிடம் என்ன இது இவ்வளவு பெரிய மீனை நாம சாப்பிட முடியுமா? என்று கேட்டேன். கொஞ்சம் பொறுமையா இருங்க நாம சாப்பிட தானே போகிறோம் என்று பதில் சொன்னார்.
அவன் எங்கள் கண் முன்னாடியே அழகாக கிளீன் செய்து உப்பை மட்டுமே தடவி கொதிக்கும் எண்ணையில் தூக்கி போட்டான். மசாலா என்ற பேச்சுக்கே இடமில்லை.
நானும் ரூம் மேட்டும் எதையோ வெறிப்பது போல் நின்று கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் மீனை எண்ணையில் இருந்து எடுத்து ஒரு பெரிய தட்டில் கப்சா ரைசை வைத்து அதன் மேல் இந்த இரண்டு மீனையும் வைத்து எங்களிடம் கொண்டு தந்தான்.
அப்படியே சாப்பிட அமர்ந்தோம். எங்களை அழைத்து சென்ற நண்பர் சாப்பிடுங்க என்று மீனை காட்டினார். சரி என்ற முடிவுடன் மீனை சாப்பிட ஆரம்பித்தோம். ஆரம்பித்தது தான் தெரியும்.. அதன் பிறகு ஒருவரும் வாயே தொறக்கவில்லை. அந்த புல் பிளேட்டும் காலி பண்ணிட்டுதான் எழுந்தோம். உண்மையில் அவ்வளவு ருசி... அழைத்து சென்ற நண்பர் எங்களை பார்த்து சிரித்து கொண்டே எப்படி இருந்தது என்று கேட்டார். அடுத்தது எப்ப நாம வறோம் என்று கேட்டோம்.
அப்புறம் அடிக்கடி அங்கு வருவது வழக்கமாயிட்டு.... உண்மையில் சுத்தமாக மசாலா எதுவும் இல்லாமல் மீன் சாப்பிடுவது தனி ருசிதான். நேற்று போய் சாப்பிட்ட போது எடுத்த போட்டோக்கள் தான் கீழே உள்ளவை...
இப்ப தாங்க கடலில் இருந்து பிடிச்சிட்டு வந்தது..... அப்படினு சொல்ல மாட்டேன்... இன்னைக்கு இது மூணுதான் மாட்டுச்சு
நீங்க இருக்கிற அவசரத்தா பார்த்தா அப்படியே போட்டு ப்ரை பண்ண வேண்டியது தான்..
அண்ணே அந்த வால் பகுதியில் நீங்க கிளீன் பண்ணலை..... விடுங்க தம்பி அடுத்த முறை கிளீன் பண்ணிறேன்..
தண்ணியை இப்படி செலவு பண்ணி கிளீன் பண்ணுறீங்க..... உண்மையில் தண்ணி வைச்சுதான் கிளீன் பண்ணுறீங்களா... இல்லா பெட்ரோலா? ஏன்னா உங்க ஊர்ல தண்ணியை விட பெட்ரோல் தான் விலை கம்மியா இருக்கு....
ஏண்ணே உப்பு போடுறதுனால இதை கருவாடுனு சொல்லா மாட்டாங்க இல்லா. ஏன்னா நான் மீனுன்னு சொல்லுவேன்.... எல்லாரும் நம்பனும்...
அண்ணே எங்க ஊர்ல உள்ள அந்நியன் படத்துல கூட இது போல தான் ஒரு சட்டில போட்டு வில்லனை ஹீரோ பொரிப்பாரு.... நீங்க மீனை பொரிக்கிறீங்க...
எப்படி அண்ணே உப்பு பாப்பீங்க.... அப்படியே கிள்ளி வாயில போட்டு பாருங்க.... நாக்கு வெந்தா நான் பொறுப்பில்லை...
ஆஹா அடுகிட்டாங்க ...... இனி பேச்சு கிடையாது வீச்சு தான்..... இதை எத்தனை பேர் சாப்பிட்டோம் என்று கரெக்டா சொன்னால் பிஷ்ப்பிரை பற்றிய முழு நீள வீடியோ படம் மெயிலில் அனுப்பி வைக்கப்படும்....
ஒரு விளம்பரம்..... இது நான் தானுங்கோ.....
குறிப்பு: மீனின் உண்மையான் டேஸ்டை இதில் தான் பார்க்க முடிந்தது. காரணம் நமது ஊர்களில் மசாலா சேர்ப்பதால் அதன் டேஸ்ட் மாறி விடுகிறது. பொரித்து முடித்த பின்பு சிறிது பெப்பர் சேர்கிறார்கள். அவ்வளவுதான். நான் இருக்கும் இடத்தில் தான் செங்கடல்(RedSea) இருக்கின்றது. மேலே பார்த்த மீன்கள் கூட அதில் பிடிக்கப்பட்டது தான். சவுதியை தவிர வேறு இங்கும் இந்த மாதிரி மீன் பிரிப்பரேசன் இல்லை என்று சொல்லுகிறார்கள்.
.
.
.