Showing posts with label பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல். Show all posts
Showing posts with label பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல். Show all posts

Monday, August 23, 2010

ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி

ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையான‌து இந்த‌ வ‌ருட‌த்தை உல‌க‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் வ‌ருட‌மாக‌ அறிவித்துள்ள‌து(International Year of Biodiversity-2010). இவ்வாறு அறிவித்திருப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வையும், அத‌ன் அவ‌சிய‌த்தையும் ம‌க்க‌ளிட‌ம் கொண்டுசெல்வ‌தாகும்.

Biodiversity is life.
Biodiversity is our life.




விள‌க்க‌ம்:

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்ப‌து புவியின் அனைத்து ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழ்நிலை முறைக‌ளில் வாழும் உயிரின‌ங்க‌ள் ஆகும். இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌து. இந்த‌ உயிரின‌ங்க‌ளின் த‌ற்போதைய‌ நிலைக‌ளை அள‌விட‌வும், அவைக‌ளின் பெருக்க‌த்தையும் ம‌திப்பிடுகிற‌து.

எத‌ற்க்காக‌ இந்த‌ உயிரின‌ங்க‌ளை பாதுகாக்க‌ வேண்டும்?.

நாம் உண்ணும் உண‌வில் 80 ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கில் வாழும் தாவ‌ர‌ங்க‌ளையும், வில‌ங்குக‌ளையும் சார்ந்து தான் இருக்கின்ற‌ன‌.

இப்போது உள்ள‌ வாழ்க்கைமுறையில் நோயில்லாம‌ல் வாழ்வ‌து என்ப‌து நினைத்து பார்க்க‌ முடியாத‌ ஒன்று, இந்த‌ நோய்களின் தாக்க‌த்தில் இருந்து ந‌ம்மை காக்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தும் ம‌ருந்துக‌ளில் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌து இந்த‌ உயிரின‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌டும் பொருட்க‌ள் தான்.

இருப்பிட‌ங்க‌ள் ம‌ற்றும் ஆடைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கும் தாவ‌ர‌ங்க‌ள் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து.

இவ்வாறு ந‌ம‌க்கு இன்றிய‌மையாத‌ பொருட்க‌ளான‌ உண‌வு, உடை, உற‌விட‌ம் என்ற‌ கார‌ணிக‌ளுக்கு நாம் இவைக‌ளை சார்ந்தே வாழ‌ வேண்டியுள்ள‌து. இவ்வாறு ந‌ம‌க்கு எல்லாவித‌த‌திலும் தேவையாக‌ இருக்கும் இந்த‌ உயிரின‌ங்க‌ளை நாம் பாதுகாக்கிறோமா? என்ப‌து ந‌ம்மை நாம் கேட்க‌ வேண்டிய‌ கேள்வி.

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் இய‌ற்கையாக‌ க‌ண்ணுக்கு தெரியாம‌ல் ந‌டைபெறும் ப‌ல‌ ப‌ணிக‌ளை செய்கின்றது. வ‌ளி ம‌ண்ட‌ல‌த்தில் ந‌டைபெறும் வேதியிய‌ல் ம‌ற்றும் நீர் சுழ‌ற்ச்சிக‌ளை ச‌ம‌ன் ப‌டுத்துகிற‌து. நீரை தூய்மை ப‌டுத்துத‌ல்(மீன்க‌ள்) ம‌ற்றும் ம‌ண்ணில் ச‌த்துக‌ளை ம‌றுசுழ‌ற்ச்சி செய்து(ம‌ண்புழு) வ‌ள‌மான‌ நில‌த்தை கொடுக்கிற‌து. ப‌ல்வேறு ஆய்வுக‌ளின் ப‌டி இய‌ற்கையான‌ சூழ்நிலையை ந‌ம்முடைய‌ அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியின் மூல‌ம் அமைத்து கொள்ள‌ முடியாது என்று ஆய்வாள‌ர்க‌ள் தெரிவிக்கிறார்க‌ள்.

உதார‌ண‌மாக‌ பூக்க‌ளில் பூச்சிக‌ள் மூல‌ம் ந‌ட‌க்கும் ம‌க‌ர‌ந்த‌சேர்க்கையை ம‌னித‌ர்க‌ளான‌ ந‌ம்மால் ந‌ட‌த்த‌ முடியுமா?... (முடியும் ஆனால் இய‌ற்கையாய் ந‌டைபெறும் ஒரு செய‌லை செய்ய‌, செய‌ற்கைக்கு எவ்வ‌ள‌வு செல‌வு செய்ய‌ வேண்டிவ‌ரும்)

தொழிற்ச‌லைக‌ளுக்கு தேவையான‌ மூல‌ப்பொருட்க‌ள் பெரும்பாலும் உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளில் இருந்தே எடுக்க‌ப்ப‌டுகிற‌து. என‌வேதான் இந்த‌ உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளை அழியாம‌ல் பாதுகாப்ப‌துக்கு உல‌க‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து.

இய‌ற்கையை ர‌சிப்ப‌து என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் மிக‌ பிடித்த‌மான‌ ஒன்று. கோடைக்கால‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால் இய‌ற்கையை ர‌சிக்க‌ ம‌லைப் பிரேதேச‌ங்க‌ளுக்கு கிள‌ம்பிவிடுவோம். இய‌ற்கை அருவிக‌ளும், ப‌ற‌வைக‌ளும் எவ‌ர் க‌ண்க‌ளையும் கொள்ளை கொள்ளும். இந்த‌ இய‌ற்கைய‌ழ‌கு தான் ப‌ல‌ இசைய‌மைப்பாள‌ர்க‌ளுக்கும், க‌விஞ‌ர்க‌ளுக்கும், ஓவிய‌ர்க‌ளுக்கும் ம‌ற்றும் க‌லைஞ‌ர்க‌ளுக்கும் ஊக்க‌மாய் அமைந்துள்ள‌து.



அழிக்கும் கார‌ணிக‌ள்:

ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை அழிக்கும் கார‌ணிக‌ளை எட்வ‌ர்ட் ஓ வில்ச‌ன் என்ற‌ ஆய்வாள‌ர் ஆங்கில‌த்தில் HIPPO (ஹிப்போ) என்று அழைக்கிறார். அதில் ஐந்து கார‌ணிக‌ளை குறிப்பிடுகிறார்.

1)வாழிட‌ம் அழித்த‌ல் (H-Habitat destruction)
2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள் (I-Invasive species)
3)மாசுபாடு (P-Pollution)
4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு (P-human over population)
5)அதிக‌மான‌ அறுவ‌டை (O-Overharvesting)

1)வாழிட‌ம் அழித்த‌ல்:

இதை ப‌ற்றி அதிக‌ம் சொல்ல‌ வேண்டிய‌து இல்லை. ந‌ம் க‌ண்முன்னே ந‌ட‌க்கும் செய‌ல்க‌ள் தான். ப‌ல‌ விளைநில‌ங்க‌ள் க‌ட்டிட‌ங்க‌ளாக‌வும், காடுக‌ள் தொழிற்சாலைக‌ளாக‌ மாறிக்கொண்டிருக்கின்ற‌து. உயிரின‌ங்க‌ளில் வாழிட‌ங்க‌ளை அழித்து ந‌ம‌து வாழிட‌ங்க‌ளை பெருக்கி கொள்கிறோம். கி.பி 1000 முத‌ல் இன்றுவ‌ரை அழிவிற்கு உண்டான‌ தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்கின‌ங்க‌ள் ம‌னித‌ ந‌ட‌வ‌டிக்கையால் ஏற்ப‌ட்ட‌தே ஆகும்.

2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள்:

உல‌கில் ப‌ல்வேறு ப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ள் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் அந்த‌ சூழ‌லுக்குகேற்ப‌ கூட்ட‌மாக‌ வாழ்கின்ற‌ன‌. அவ்வாறு கூட்ட‌மாக‌ வாழ்வ‌த‌ற்கு கார‌ண‌ம் க‌ண்ட‌ங்க‌ள், க‌ட‌ல்க‌ள், ம‌லைக‌ள், ஆறுக‌ள் ஆகிய‌வ‌ற்றால் ஒன்றோடு ஒன்று க‌ல‌ந்துவிடாம‌ல் பிரித்துவைக்க‌ப்ப‌டுவ‌தால் தான். ஆனால் த‌ற்போது ம‌னித‌ர்க‌ளால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போக்குவ‌ர‌த்து வ‌ச‌திக‌ளால் இவைக‌ள் த‌ங்க‌ளின் சூழ‌லில் இருந்து சுல‌ப‌மாக‌ இட‌ம்பெய‌ர்கின்ற‌ன‌. இவ்வாறு இட‌ம்பெய‌ரும் சிற்றின‌ங்க‌ள் அந்த‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ சிற்றின‌ங்க‌ளில் வ‌ள‌ர்ச்சியை அப‌க‌ரித்து த‌ன்னுடைய‌ இன‌த்தை விருத்திசெய்கின்ற‌ன‌.
உதார‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் இருந்து கொண்டுவ‌ந்து ந‌ம‌து நாட்டில் ப‌யிரிட‌ப்ப‌டும் ப‌ழ‌ங்க‌ளை சொல்ல‌லாம்.

3)ம‌ர‌ப‌ணு மாசுபாடு:

தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்குக‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் ம‌ர‌ப‌ணு சோத‌னைக‌ள் மூல‌ம் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌ங்க‌ள். இத‌னால் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌த்தின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளில் மாசுபாடு ஏற்ப‌டுகிற‌து. இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும்.

எந்த‌வொரு உயிரியிலும் வெளிப்புற‌த் தோற்ற‌த்தை ம‌ட்டும் அடிப்ப‌டையாக‌ வைத்து க‌ல‌ப்பின‌ம் செய்யாம‌ல், ஆழ்ந்து ஆராய்ந்து உட்புற‌த் தோற்ற‌த்திலும் உள்ள‌ மாற்ற‌ங்க‌ளை க‌ருத்தில் கொண்டு ஆய்வு செய்வ‌தே சிற‌ந்த‌து.

உதார‌ண‌மாக‌ இப்போது ச‌ந்தையில் உள்ள‌ க‌த்திரிக்காவை(Genetically Modified Brinjal) சொல்ல‌லாம்.

4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு:

ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை ஆண்டுதோறும் அதிக‌ரித்து கொண்டே இருக்கிற‌து. இந்த‌ அதிக‌ப்ப‌டியான‌ வ‌ள‌ர்ச்சியும் ப‌ல்லுயிர் பெருக்க‌த்திற்கு த‌டையாக‌ இருக்கின்ற‌து. இந்த‌ ம‌க்க‌ள்த்தொகை பெருக்க‌த்தால் சுற்றுப்புற‌ச்சூழ‌ல் வெகுவாக‌ ப‌திக்க‌ப்ப‌டுகிற‌து அத‌னால் பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல் போன்ற‌ நிக‌ழ்வுக‌ளும் நிக‌ழ்கின்ற‌ன‌. ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் முக்கிய‌ த‌ள‌மாக‌ க‌ருத‌ப்ப‌டும் ப‌வ‌ள‌ப்பாறைக‌ள், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming) நிக‌ழ்வுக‌ளால் இன்னும் 20 முத‌ல் 40 வ‌ருட‌ங்க‌ளில் முற்றிலும் அழிந்துவிடும் அபாய‌ம் உள்ள‌து.

5)அதிக‌மான‌ அறுவ‌டை:

தாவ‌ர‌ங்க‌ளில் விளையும் பொருட்க‌ளை உண‌வுக்கு என்று பொரும்ப‌குதியை நாம் எடுத்துவிடுகிறோம், அவைக‌ளின் ச‌ந்த‌திக‌ளை உருவாக்குவ‌த‌ற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அதிக‌ விளைச்ச‌ல் த‌ரும் வீரிய‌ ர‌க‌ ப‌யிர்க‌ளை ப‌யிர் செய்து அதில் இய‌ற்கைக்கு மீறிய‌ அதிக‌ ம‌க‌சூலை பெறுகிறோம்.

இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் அதிக‌ம் செறிந்துள்ள‌ ப‌குதியான‌ அமோசான் ம‌ழைக்காடுக‌ள் ப‌ற்றியும், அவ‌ற்றின் அழிவுக‌ள் ப‌ற்றியும் அடுத்த‌ ப‌குதியில் எழுதுகிறேன்.


தொட‌ரும்...

குறிப்பு: ஒரு வார‌த்திற்கு முன்னால் இர‌வு ப‌தினொரு ம‌ணிய‌ள‌வில் டிவி ரிமோட்டை பொதிகை சேன‌ல் திருப்பினேன். அதில்தான் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் ப‌ற்றி டாக்ட‌ர் ஒருவ‌ர் த‌ன்னுடைய‌ க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொண்டிருந்தார். அத‌ன் தாக்க‌ம் தான் என்னை எழுத‌ தூண்டிய‌து. என்னுடைய‌ ச‌ந்தேக‌ம் எல்லாம் இர‌வு ப‌தினொரு ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பும் நிக‌ழ்ச்சியா இது?.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள்? ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை?..

.

.

Tuesday, May 11, 2010

செய‌ற்கையிழை ஆடைக‌ள்_ம‌ர‌ங்க‌ளின் அழிவுக‌ள்

ம‌ர‌ங்க‌ளின் அழிப்பு ப‌ற்றியும், ம‌ழைப்பொழிவு குறைவிற்கான‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ற்றியும், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல் ப‌ற்றியும் ஏராள‌மான‌ க‌ட்டுரைக‌ளும், ப‌திவுக‌ளும் தின‌மும் இணைய‌ங்க‌ளில் வெளிவ‌ருகின்ற‌ன‌. அவ‌ற்றில் ப‌ல‌ தெரியாத‌ த‌க‌வ‌ல்க‌ளையும், நாம் என்ன‌ செய்ய‌வேண்டும் என்ப‌து ப‌ற்றியும் விரிவாக‌ விள‌க்கியுள்ள‌ன‌ர். இதில் என‌க்கு தெரிந்த‌ ஒரு த‌க‌வ‌லையும் உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்துகொள்கிறேன்.

ஆடைக‌ள் தயாரிக்க‌ இப்போது செய‌ற்கையிழைக‌ள் அதிக‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுங்கின்ற‌ன‌. இந்த‌ செய‌ற்கையிழைக‌ள் தயாரிக்க‌ப் பெரும்பாலும் ம‌ர‌க்கூழ்க‌ள்(Wood Pulp) தான் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப‌டுகின்ற‌ன். இப்போது செய‌ற்கையிழைக‌ளினால் த‌யாரிக்க‌ப்ப‌டும் ஆடைக‌ளை தான் நாம் அனைவ‌ரும் விரும்பி அணிகின்றோம். என‌வே செய‌ற்கையிழைக‌ளின் தேவைக‌ள் ப‌ல‌ம‌ட‌ங்கு அதிக‌மாகின்ற‌து. அத‌ற்காக‌ வெட்ட‌ப்ப‌டும் ம‌ர‌ங்க‌ளும் அதிக‌ம்.

இந்த‌ செய‌ற்கையிழைக‌ள்(Rayon or Staple Fibre) ப‌ல‌முறைக‌ளில் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவை பெரும்பாலும் பைன், புருஸ் ம‌ற்றும் ஹெம்லாக்(Pine, Spruce and Hemlock) போன்ற‌ம‌ர‌ங்க‌ளில் மூலம் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன். மூங்கிலும்(Bamboo) இந்த‌ செய‌ற்கையிழை த‌யாரிப்பில் முக்கிய‌ப‌ங்கு வ‌கிக்கிற‌து.

இந்த‌ செய‌ற்கையிழையான‌து 1884-ஆம் ஆண்டு ஹொன்ட் ஹிலாரி டி சார்டோன‌ட்(Count Hilaire de Chardonnet) என்ற‌ பிர‌ஞ்சு நாட்டின‌ரால் நைட்ரோசெல்லுலோஸ்(Nitrocellulose) என்ற‌ வேதிய‌ல் பொருளில் இருந்து உருவாக்கினார். பின்பு பிர‌ஞ்சு அர‌சின் ப‌ண‌உத‌வியுட‌ன் உல‌கின் முத‌ல் செய‌ற்கையிழை தொழிற்கூட‌த்தையும் உருவாக்கினார். பிற்கால‌த்தில் இவ‌ர் செய‌ற்கையிழையின் த‌ந்தை(Father of Rayon) என்றைழைக்க‌ப்ப‌ட்டார்.



ஆர‌ம்ப‌த்தில் இந்த‌ செய‌ற்கையிழை உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கு அதிக‌ செல‌வு ஆன‌து. நாளைடைவில் இந்த‌ செய‌ற்கையிழை தயாரிக்கும் முறையில் ப‌ல‌ மாற்ற‌ங்க‌ள் செய்ய‌ப்ப‌ட்டு செல‌வுக‌ளை குறைத்த‌ன‌ர். பெரும்பாலான‌ செய‌ற்கையிழைக‌ள் பின்வ‌ரும் மூன்று முறைக‌ளில் த‌யாரிக்க‌ ப‌டுகின்ற‌ன‌.

1)விஸ்கோஸ் ரேயான்(Viscose Rayon)

2)குப்புரோமினிய‌ம் ரேயான்(Cuprammonium Rayon)

3)ஸ்பானிபைடு செல்லுலோஸ் அசிடேட்(Saponified Cellulose Acetate)

இந்த‌ செய‌ற்கையிழைக‌ள் தாயாரிக்கும் முறை, உப‌யோக‌ப்ப‌டுத்தும் வித‌ம் ம‌ற்றும் அத‌ன் த‌ர‌த்தினை கொண்டு மூன்று வ‌கையாக‌ பிரிக்கின்ற‌ன‌ர்.

1)ஹ‌ய் வெட் மாடியூல் ரேயான்(High wet modulus rayon-HMW)

2)பாலினோஸ் ரேயான்(Polynosic Rayon)

3)ஸ்பெச‌லிட்டி ரேயான்(Specialty Rayons) இவை இன்னும் சில‌ உட்பிரிவுக‌ளாக‌ வ‌கைப்ப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌ன‌.

இந்த‌ செய‌ற்கையிழையால் த‌யாரிக்க‌ப்ப்டும் சில‌ பொருட்க‌ள்:

1)அணிப‌வை: பிள‌வுஸ், துணிக‌ள், ஜாக்கெட், லிங்க‌ரி, லைனின் மெட்டீரிய‌ல், ஸ்போட்ஸ் ஆடைக‌ள், சூட்ஸ், டை, வொர்கிங் கிளாத்

2)வீட்டு உப‌யோக‌ங்க‌ள்: பெட்சீட், பிளாங்க்ட், க‌ர்டெயின், டிராபெரிஸ், சீட்ஸ், ஸ்லிப்க‌வ‌ர்ஸ், டேபிள் கிளாத்

3)இண்ட‌ஸ்டிரிய‌ல் உப‌யோக‌ங்க‌ள்: சேப்டி கிளாத்க‌ள், கையுறைக‌ள், மெடிக்க‌ல் ம‌ற்றும் ச‌ர்ஜ‌ரிக்க‌ல் கிளாத்க‌ள்



இந்த‌ செய‌ற்கையிழை த‌யாரிப்புக‌ள் க‌ட‌ந்த‌ 30 ஆண்டுக‌ளில் பெரும் மாற்ற‌த்தை கொண்டு வ‌ந்துள்ள‌து. அத‌வ‌து இவ‌ற்றின் தேவைக‌ள் ப‌ல‌ ம‌டங்கு உய‌ர்ந்துள்ள‌து. உல‌க‌ நாடுக‌ளின் செய‌ற்கையிழை தேவைக‌ளில் 90% தேவையை கீழ்க‌ண்ட‌ ப‌த்து நாடுக‌ள் த‌யாரித்து ஏற்றும‌தி செய்கின்ற‌ன‌. 1)சீனா, 2)வெஸ்ட் யூரோப், 3)இந்தியா, 4)இந்தோனேசியா, 5)யு.எஸ்.ஏ, 6)தைவான், 7)துருக்கி, 8)ஜ‌ப்பான், 9)தாய்லாந்து, 10)கொரியா.

உல‌க‌ அள‌வில் செய‌ற்கையிழை ஏற்றும‌தியில் நாம் மூன்றாவ‌து இட‌த்தில் இருக்கிறோம். உல‌க‌ நாடுக‌ளின் செய‌ற்கையிழை தேவைக‌ளில் 26% நாம் உற்ப‌த்தி செய்து ஏற்றும‌தி செய்கிறோம்.

மேலே செய‌ற்கையிழையின் தேவைக‌ளையும், அத‌ன் வ‌கைக‌ளை‌யும் பார்த்தோம். இந்த‌ செய‌ற்கையிழை த‌யாரிக்க‌ மூல‌ப்பொருள்(Raw Material) ம‌ர‌ங்க‌ள்(wood) தான். கீழ்க‌ண்ட‌ செய்முறையை(Process Flow) நீங்க‌ள் பார்த்தால் உங்க‌ளுக்கு புரியும்.



வ‌ருட‌த்திற்கு வ‌ருட‌ம் இந்த‌ செய‌ற்கையிழையின் தேவைக‌ள் ப‌ல‌ ம‌ட‌ங்காக‌ அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. க‌ட‌ந்து ஐந்து வ‌ருட‌ங்க‌ளில் இத‌ன் தேவைக‌ள் இரும‌ட‌ங்காக‌ உய‌ர்ந்துள்ள‌து என‌ ஆய்வுக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. இவ்வாறு செய‌ற்கையிழையின் தேவைக‌ள் அதிக‌மானால் அவை த‌யாரிக்க‌ வெட்ட‌ப்ப‌டும் ம‌ர‌ங்க‌ளின் தேவையும் அதிக‌ம் ஆகும்.



ச‌மீப‌த்தில் நான் இணைய‌த்தில் பார்த்த‌ செய்தி ஜ‌ப்பானில் செய‌ற்கையிழை த‌யாரிக்க‌ ம‌ர‌ங்க‌ள் ப‌ற்ற‌க்குறை ஏற்ப‌ட்டுள்ள‌தாம். அவை வெளிநாடுக‌ளில் இருந்து மூல‌ப்பொருளான‌() ம‌ர‌ங்க‌ளை இற‌க்கும‌தி செய்கின்ற‌ன‌.

உல‌கின் செய‌ற்கையிழை த‌யாரிப்பில் முன்ன‌ணியில் இருக்கும் ஒரு நிறுவ‌ன‌ம் ஆஸ்திரியா நாட்டில் இருந்துதான் த‌ன‌க்கு தேவையான‌ ம‌ர‌ங்க‌ளில் 50% இற‌க்கும‌தி செய்கின்ற‌து.

செய‌ற்கையிழை த‌யாரிப்பில் விஸ்கோஸ் ஸ்டேபிள் பைப‌ர்(Viscose Staple Fibre-VSF) என்ற‌ பெய‌ருட‌ன் ஆதித்யா பிர்லா குருப்பின்(Aditya Birla Group) நிறுவ‌ன‌ங்க‌ள் இந்தியாவில் நாக்தா(Nagda), க‌ரிகார்(Harihar), க‌ராச்சி(Karach-Gujarat) போன்ற‌ இட‌ங்க‌ளில் உள்ள‌து. இந்த‌ நிறுவ‌ன‌த்திற்கு மெட்டீரிய‌ல் கேட்ட‌லாக்(Material Catalog) ப‌ண்ணும் பிர‌ஜெக்ட்டில் நானும் இருந்தேன். அப்போது அந்த‌ நிறுவ‌ன‌த்திற்கு தேவைதான் மூல‌ப்பொருளான‌(Raw Material) ம‌ர‌ங்க‌ளையும் கேட்ட‌லாக் ப‌ண்ணினோம். அப்போது தான் இவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு ம‌ர‌ங்க‌ளை அழிக்கிறார்க‌ள் என்று தெரிய‌ முடிந்த‌து. இந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும்பாலான‌ ம‌ர‌ங்க‌ளை இந்தோனேசியாவில் இருந்து இற‌க்கும‌தி செய்வ‌தாக‌ சொன்னார்க‌ள். அங்கு ப‌ணி புரிந்த‌ ந‌ன்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌து "வெகுவிரைவில் எங்க‌ளுக்கும் ம‌ர‌ங்க‌ளின் ப‌ற்றாக்குறை வ‌ரும்" என்ப‌தாகும்.



காகித‌ங்க‌ளும் இந்த‌ ம‌ர‌கூழ்க‌ளில் இருந்துதான் த‌யாரிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் இந்த‌ காகித‌ங்க‌ள் மீண்டும் ம‌றுசுழ‌ற்ச்சிக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஆனால் இந்த‌ செய‌ற்கையிழைக‌ளால் த‌யாரிக்க‌ப்ப‌டும் ஆடைக‌ள் ம‌றுசுழ‌ற்ச்சிக்கு பாய‌ன்ப‌டுத்துவ‌து இல்லை என்ப‌தும் ஒரு க‌வ‌லையான‌ விச‌ய‌ம்.

என‌வே இந்த‌ நாக‌ரீக‌ உல‌கில் நாளொரு மேலாடையும், பொழுதொரு புத்தாடையுமாய் உடுத்துப‌வ‌ர்க‌ளே!!!.. இதையும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌த்தில் கொள்ளுங்க‌ள்.
.

.
Related Posts with Thumbnails