Tuesday, May 31, 2011

இர‌ண்டு பாக்கெட் கொடு!!!

சுத்த‌மான‌ த‌ண்ணி எங்கும் கிடைக்காது, கார்ப்ப‌ரேச‌ன் த‌ண்ணியை தான் எல்லா இட‌மும் வைச்சிருப்பானுங்க‌. அத‌னால‌ ப‌ச‌ங்க‌ளுக்கு வெளியில் இருந்து த‌ண்ணி வாங்கி குடிக்க‌ கொடுக்க‌ முடியாது, ரெண்டு பாட்டில‌ த‌ண்ணி நிர‌ப்பி ஹேண்ட் பேக்குல‌ போட்டுக்க‌.

ச‌ரிங்க‌..

உன‌க்கு ஒவ்வொரு வாட்டியும் சொல்ல‌னுமா?.. ப‌ச‌ங்க‌ளை வெளியில‌ கூட்டி போகும் போதும் அவ‌ங்க‌ முக‌த்தை கைக்குட்டையால‌ க‌ட்ட‌‌ சொல்லியிருக்கேனா, இல்லையா?.. ரோட்டுல‌ ம‌னுச‌ன் ந‌ட‌க்க‌ முடிய‌லை. வ‌ண்டி எல்லாம் புழுதியையும், புகையையும் ந‌ம்ம‌ மேல‌ தான் கொட்டிட்டு போவான். என்னைக்கு தான் இந்த‌ ஹ‌வ‌ர்மெண்ட் திருந்த‌ போகுதோ...

ஹெண்ட்பேக்ல‌ தான் வ‌ச்சிருக்கிறேன், இதோ க‌ட்டிவிட்டுறேன்..

ம்ம்ம்..

ஏங்க‌ வீட்ல‌ நீங்க‌ வாங்கி வ‌ந்த‌ ப‌ழ‌ம் எல்லாம் தீர்ந்து போச்சு, இதோ ப‌ழ‌ வ‌ண்டி வ‌ருது, இரு ரெண்டு கிலோ வாங்கி வைச்சுக‌லாமா?..

உன‌க்கு அறிவே கிடையாதா?.. இந்த‌ ப‌ழ‌ங்க‌ள் எல்லாம் க‌ல்லு போட்டு ப‌ழுக்க‌ வைச்சுருப்பானுங்க‌. க‌ல‌ருதான் சூப்ப‌ரா இருக்கும்.. வாங்கி சாப்பிட்டா வாந்தி தான் வ‌ரும்...

அம்மா என‌க்கு ஜ‌ஸ்கிரீம் வேணும்?..

டேய்..... என்னிட‌ம் கேட்காத‌, முன்னாடி போற‌ உங்க‌ அப்பாகிட்ட‌ போய் கேளு.. நான் அவ‌ர்கிட்ட‌ கேட்டு, வாங்கி க‌ட்டிக்கிட்ட‌து போதும்.. போ.. போய் நீயே கேளு!!!..

அப்பா... அப்பா.. இங்க‌ பாருங்க‌ ஐஸ்கிரீம் க‌டை இருக்கு, அதுல‌ இருந்து என‌க்கு ஒரு வெண்ணிலா ஐஸ்கிரீம் வாங்கி தாங்க‌..

என் செல்ல‌ குட்டியில்லா.. சூச் சூசூ.. ஐஸ்கிரீம் சாப்பிட்டா ஜ‌ல‌தோச‌ம் வ‌ரும், இரும‌ல் வ‌ரும், காய்ச்ச‌ல் வ‌ரும், அப்புற‌ம் டாக்ட‌ர் கிட்ட‌ போக‌னும், உங்க‌ளுக்கு பெரிய‌ ஊசி போட‌னும், அத‌னால‌ இப்ப‌ வேண்டாண்டா க‌ண்ணு.. போ.. போய் அம்மாகிட்ட‌ பிஸ்க‌ட் வாங்கி சாப்பிடு..

அம்மா என‌க்கு பிஸ்க‌ட் வேண்டாம், எல்லாத்தையும் த‌ம்பிக்கு கொடுங்க‌.. என‌க்கு சாக்லெட் வாங்கி தாருங்க‌..

ஏங்க‌.. உங்க‌ பொண்ணுக்கு சாக்லெட் தான் வேணுமாம், பிஸ்க‌ட் வேண்டாமாம்..

புஷ்சு இங்க‌ வாட‌ செல்ல‌ம்.. இங்க‌ பாருடா!!! சாக்லெட் சாப்பிட்ட‌ ப‌ல்லெல்லாம் சொத்தை ஆயிடும். அப்புற‌ம் அதுல‌ பூச்சி எல்லாம் வ‌ரும். அது ரெம்ப‌ வ‌லிக்கும்டா.. அத‌னால‌ இன்னைக்கு சாக்லெட் வேண்டாம். போம்மா போய் அம்மா கிட்ட‌ போய் பிஸ்க‌ட் வாங்கி ச‌ம‌த்த‌ சாப்பிடு..

ஏங்க‌ இந்த‌ ப‌ஸ் ஸ்டாப்புல‌ தானே, நாம‌ ப‌ஸ் ஏற‌னும்?...

ஆமா.. இங்க‌ தான் ஏற‌னும்.. அதோ பாரு.. அந்த‌ செய‌ர் காலியா தான் இருக்கு.. இர‌ண்டு பேரையும் கூட்டிட்டு போய் அதுல‌ உக்காரு.. நான் அந்த‌ பெட்டிக‌டைக்கு போயிட்டு வ‌ந்திடுறேன்.

ச‌ரிங்க‌..

------- X -------- X ------- X -------- X --------

வாங்க‌ சார், என்ன‌ இன்னைக்கு, குடும்ப‌தோட‌ வெளியில‌ கிள‌ம்பிட்டீங்க‌ போல‌...

ஆமா காளி.. வெளியில‌ கொஞ்ச‌ம் ஷாப்பிங்‌ இருக்கு..

கோல்ட் பிளாக் பில்ட‌ர் ஒரு பாக்கெட் போதுமா சார்?..

இல்ல‌ காளி.. நான் வ‌ர்ற‌துக்கு ஈவ்னிங் ஆயிரும் போல‌.. அத‌னால் ரெண்டு பாக்கெட்டா கொடுத்துடு, போற‌ இட‌த்துல‌ இந்த‌ பிராண்டு இல்ல‌, சிச‌ர்ஸ் இருக்கு, வில்ஸ் இருக்குனு க‌டுப்பேத்துவானுங்க‌.. உன‌க்கு தான் தெரியுமே, இந்த‌ பிராண்டை த‌விர‌ வேறுயேதும் ந‌ம‌க்கு ஒத்துக்காதுனு......

தெரியும் சார்..

------- X -------- X ------- X -------- X -------- X ------- X -------- X -------- X -------



இன்று உல‌க‌ புகையிலை எதிர்ப்பு நாள்

புகையிலையால் ஏற்ப‌டும் தீமைக‌ளை நாமும் அறிவோம்!!!!!!..

ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் அறிய‌ த‌ருவோம்!!!!!..


.

.

.

Monday, May 30, 2011

எங்க வீட்ல எதுக்குடா சண்டை போடனும்?

நான் இன்னைக்கு ரூம்க்கு வரலைடா.. குமார் ரூமுக்கு போறேன்.

ஏண்டா, என்னாச்சி..

இல்லடா... வீட்ல இருந்து போன் வந்திச்சி. அப்பா ரெண்டு நாளா வீட்ல சாப்பிடலையாம், எனக்கு மனசு கஷ்டமா இருக்குடா.. தண்ணி அடிச்சே ஆகனும். குமார் ரூம்ல தான் இன்னைக்கு பாட்டில் இருக்கும்...

அப்பா ஏண்டா வீட்ல சாப்பிடலை? ஏதும் பிரச்சனையா? என்ன ஆச்சி?..

நாம இரண்டு பேரும் சென்னையில இருக்கும் போது உன்னிடம் சொல்லியிருக்கிறேனானு தெரியல.. எனக்கு அம்மா வழியில் உள்ள ஒண்ணுவிட்ட மாமா ஒருத்தர் சென்னை நெசபாக்கத்தில் குடும்பத்துடன் இருந்தார். அவருக்கு இரண்டு பொண்ணுங்க. இரண்டு பொண்ணுங்களுக்கும் விவரம் தெரியிறதுக்கு முன்பே ஒரு விபத்துல மாமி இறந்திட்டாங்க. அதுக்க அப்புறம் மாமா வேற கல்யாணம் ஏதும் பண்ணல. மாமாவின் இரண்டு பொண்ணுங்களும் படிச்சிட்டு இருந்தது. நான் கூட ஒரு நாளு அவங்க வீட்டுக்கு போயிருக்கிறேன்..

சரிடா. அதுக்கும் உங்க அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?...

போன வாரம் வீட்டுக்கு போன் பேசினேன். ஸ்கூல் லீவா இருக்கிறதால அண்ணனும் ஊர்ல தான் இருக்கிறான். எலக்சன் டூட்டி, பரிட்சை பேப்பர் திருத்துறதுனு, வேலை எல்லாம் முடிச்சிட்டு இரண்டு வாரம் முன்னாடி தான் ஊருக்கு வந்திருக்கிறான். அன்றைக்கு, அவன் தான் போனில் என்னிடம் மாமா வீட்டு பிரச்சனை பற்றி சொன்னான். மாமாவின் மூத்த பொண்ணு கூட வேலை பார்த்த பையனுடன் வீட்டை விட்டு ஓடி போயிவிட்டாராம். ஓடிப் போனவர் சும்மா போகவில்லை, இளைய பொண்ணுக்கு மாமா செய்து வைத்திருந்த சில நகைகளையும் எடுத்திட்டு போயிட்டாராம். இந்த விசயத்தால் மாமா ரெம்ப மனசு ஒடிஞ்சி போயிட்டாராம். அதனால சென்னையில் இருந்த, தன்னோட சின்ன பொண்ணை கூட்டிட்டு ஊருக்கு வந்திருக்கிறார்.

சரி.. அப்புறம் என்ன ஆச்சி..

ஊருக்கு வந்தவர் எப்படியும் எங்க வீட்டுக்கு வருவாரு என்பதால், அண்ணனும், அம்மாவும் அப்பாவிடம் மாமாவின் பொண்ணு விசயத்தை பற்றி விவரமா சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் அவரிடம் ஓடிப்போன மூத்த பொண்ணு பற்றியே கேட்பதால் ரெம்ப மன கஷ்டத்தில் இருப்பார் என்பதால் அதை பற்றி எதுவும் திரும்பவும் மாமாவிடம் கேட்க வேண்டாமுனு சொல்லிருக்கிறார்கள். அப்பாவும் இருவரும் சொல்லும் போது "அதுவும் சரிதான், நான் ஏதும் கேட்க மாட்டேனு " தலையை ஆட்டியிருக்கிறாரு.

நேத்தைக்கு காலையில சின்ன பொண்ணுடன் வீட்டுக்கு வந்த மாமாவிடம், அப்பா; என்ன மனோகரா, மூத்த பொண்ணை கூட்டிட்டு வரலியா?.. என்று மாமாவை நெளிய வைத்திருக்கிறார். அவரும் பொண்ணுக்கு ஆபிசில் லீவு கிடைக்கவில்லை, பரிட்சை இருக்கு அப்படினு சொல்லி சமாளிச்சிட்டு கிளம்பிட்டார். அப்புறம் தான் வீட்டில் பூகம்பம் கிளம்பியிருக்கிறது.

நாங்க அவ்வளவு சொல்லியிருக்கிறோன், அவரு வந்தா.. பொண்ணு பற்றி ஏதும் கேட்க வேண்டானு, எல்லாத்துக்கும் சரினு தலையை ஆட்டிட்டு, "முதல் கேள்வியே உங்களுக்கு அதான் கிடைச்சுதானு" அண்ணனும், அம்மாவும் கேள்வி கணையை தொடுக்க...

அப்படினா, எனக்கு வயசாகி போச்சு, எனக்கு பேச தெரியாது, உங்களுக்கு தான் எல்லாம் பேச தெரியுமுனு அப்பா எதிர் கணையை தொடுக்க..

அப்படி இல்லைங்க.. நம்ம பையன் தான் அவ்வளவு சொன்னான் இல்லையா?.. அப்புறம் எதுக்கு அவரிடம் திரும்ப கேட்டீங்கனு.. அம்மா கேட்டிருக்காங்க..

"புள்ளைங்க பேச்சுதான் உனக்கு பெருசா போச்சானு" அப்பா கேட்க, சண்டை வேற மாதிரி திரும்பிடுச்சு....

இப்படி ஆரம்பிச்ச சண்டையால் தான்.. அப்பா, வீட்ல இரண்டு நாளா சாப்பிடலை...

எனக்கு காலையில இருந்து வேலையே ஓடலடா... நான் குமார் ரூமுக்கு போறேன்.

சரி போயிட்டு வா!!.. ராத்திரி சாப்பிட ரூமுக்கு வந்திருடா..

சரிடா... தூங்க வந்திடுறேன்..

"யாரோ ஒருத்தரோட பொண்ணு, யாரோ ஒருவருடன் ஓடிவிட்டாராம், அதுக்கு எங்க வீட்ல எதுக்குடா சண்டை போடனும்?, சாப்பிடாம இருக்கனும்" என்று, இரவு பதினொரு மணிக்கு தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி, அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு, பதினாறாவது முறையாக கேட்டும் நண்பனை பார்த்து, நான் என்ன சொல்வது?.... நீங்களே சொல்லுங்க!!!...
.

.

.

Monday, May 2, 2011

க‌வ‌லை உன‌க்கு..




மழைப் பொழிந்தாலும்-கவலை உனக்கு
அறுவடை செய்ய வேண்டுமேயென்று!!!

மழைப் பொய்த்தாலும்-கவலை உனக்கு
நாற்றுநடவு செய்ய வேண்டுமேயென்று!!!

அதிகப்படியாக விளைந்தாலும்-கவலை உனக்கு
தானியங்களின் விலை வீழுமேயென்று!!!

குறைவாக விளைந்தாலும்-கவலை உனக்கு
வட்டிக்கடன் வீதம் ஏறுமேயென்று!!!

திருவிழாக்கள் வந்தாலும்-கவலை உனக்கு
புத்தாடை வாங்க வேண்டுமேயென்று!!!

மகன் நன்றாக படித்தாலும்-கவலை உனக்கு
கல்விக் கட்டணம் கட்ட வேண்டுமேயென்று!!!

மகள் பெரியவள் ஆனாலும்-கவலை உனக்கு
விளைநிலம் விலை போகுமோயென்று!!!

.

.
.
Related Posts with Thumbnails