வேலைத் தேட வேண்டும் என்றவுடன் அனைவரது ஆழ்மனதிலும் தோன்றுவது இண்டர்வியூவை பற்றிய கலக்கம் தான். இந்த இண்டர்வியூவானது நாம் தேடும் வேலையைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் இண்டர்வியூ என்பது எழுத்துத் தேர்வில்(Written Test) ஆரம்பித்து கலந்துரையாடல்(Group Discussion) வரை போகும். அதே ஒரு சிறிய நிறுவனமாக இருந்தால் தகுதியானவர்களை வரவழைத்து ஒரு ஓரல் இண்டர்வியூ நடத்தி தேர்வு செய்வர். இவ்வாறு இண்டர்வியூவின் தன்மையானது வேலையை பொறுத்து மாறுபடும்
எந்தவிதமான வேலையாக இருந்தாலும் அந்த வேலைக்கான இண்டர்வியூக்கு செல்ல நாம் நம்முடைய பயோடேட்டாவை ரெடி செய்வது மிக முக்கியமாகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் முதலில் நம்முடைய பயோடேட்டாவை பார்த்து தான் நம்மை இண்டர்வியூக்கு அழைக்கலாமா?.. வேண்டாமா?.. என்று முடிவு செய்கிறார்கள். எனவே நல்ல வேலைகள் கிடைப்பதில் இந்த பயோடேட்டாவின் பங்கு மிக முக்கியமாகிறது.
கையினால் டைப் செய்து பேப்பரில் பிரிண்ட் போட்ட பயோடேட்டாவிற்கு பதில் வாயினால் பேசி வீடியோவாக தொகுக்கும் தொழில் நுட்ப முறைகள் அறிமுகம் ஆகிவிட்டன. இந்த வகையான வீடியோ பயோடேட்டாக்கள் வீடியோரெஸ்யூம்(Video Resume) என்று அழைக்கப்படுகிறது. இவை மேலை நாடுகளில் பிரபலம் என்றாலும், நமது இந்தியாவில் இப்போது தான் அறிமுகமாகிறது.
C2C Online Video Resume
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்களும் உங்களுடைய பயோடேட்டவை வீடியோவாக பதிவு செய்யலாம். இவர்கள் தான் இந்தியாவில் முதன் முதலில் இந்த ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம் தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். C2C (Candidate to Client)
பெரும்பாலும் பயோடேட்டா தயார் பண்ணும் போது இண்டர்நெட்டில் இருந்து கிடைக்கும் சாம்பிள் பயோட்டேட்டாவில் உள்ளதை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பண்ணிவிடுகிறோம். இவ்வாறு தயார் செய்த பயோடேட்டாவை கொண்டு இண்டர்வியூ சென்றால், கண்டிப்பாக இண்டர்வியூ நடத்துபவர்களின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழிக்கத்தான் செய்வோம். இந்த வீடியோ ரெஸ்யூம் மூலம் இதை கண்டிப்பாக தவிர்க்க முடியும். நாம் வீடியோவில் பேசிப் பதிவு செய்ததை பற்றி தான் கேட்பார்கள். நாமும் எந்தவிதமான டென்சனும் இல்லாமல் இண்டர்வியூவில் பங்கேற்க முடியும். இதில் பதிவேற்றி வைத்த நம்முடைய வீடியோ ரெஸ்யூமின் லிங்கை எவருக்கு வேண்டுமானாலும் மெயிலின் மூலம் அனுப்பி வைக்க முடியும். எல்லோராலும் ஓபன் செய்து பார்க்க முடியும். வீடியோ ரெஸ்யூமில் புதிதாக அப்டேட் செய்யவோ அல்லது திருத்தம் செய்யவோ எளிதாக முடியும்..
காலம் பொன் போன்றது. காலையில் இருந்து மாலை வரை இண்டர்வியூ நடத்தும் ஆபிசில் காவல் இருந்து கடைசியில் இண்டர்வியூ நடத்தும் அறைக்குள் நுழைந்தால் பயோடேட்டாவில் உள்ள விசயங்களையே திரும்ப கேட்டுவிட்டு வீட்டிற்கு லெட்டர் அனுப்புகிறோம் என்று கூலாக சொல்வார்கள். இப்படிப்பட்ட டெம்பளேட் நேர்முகத் தேர்வுகளை இந்த வீடியோ ரெஸ்யூம் மூலம் முற்றிலும் தவிர்க்க முடியும்.
இண்டர்வியூ நடத்தும் கம்பெனிகளுக்கும், ஆட்களை தேர்வு செய்ய இந்த வீடியோ ரெஸ்யூம் முறையானது ரெம்ப உதவியாக இருக்கும். ஆட்களை தேர்வு செய்வதற்கு என்று தனியாக அறைகள் ஒதுக்கி அவர்களில் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து பேசி அவர்களின் திறைமையை பரிசீலிக்க வேண்டியது இல்லை. இதனால் கம்பெனிகளுக்கு கணிசமான பணமும், நேர விரயமும் மிச்சமாகிறது.
சி2சி ஆன்லைன் வீடியோ ரெஸ்யூம்(C2C Online Video Resume) நடத்தும் இவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் இவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக மேன்பவர் கன்சல்டன்சி நடத்தி பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். மேலும் ஹெச் ஆர்(HR) தொடர்பான பல டிரெயினிங்க் கோர்ஸ்களும் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு சென்னை மற்றும் துபாயில் ஆபிஸ் இருக்கின்றது
இந்த வீடியோ ரெஸ்யூம் ஆன்லைன் முறையானது வேலை தேடுபவர்களையும்(Candidate), வேலை கொடுப்பவர்களையும்(Client) அடுத்த கட்டத்திற்கு(Next Level) அழைத்து சென்றிருக்கிறது என்பது திண்ணம். விரைவில் இவர்கள் வீடியோ விவாகா சர்வீஸும் கொண்டுவரயிருக்கிறார்கள்..
.
.
.
Friday, March 18, 2011
Wednesday, March 16, 2011
புதிய வானம்(பாலைவனம்).. புதிய பூமி(மணல்மேடு)..
அனைவருக்கும் வணக்கம்.
பதிவு எழுதுவதற்கு ரெம்ப நாட்கள் விடுமுறை கொடுத்தாயிற்று. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என நினைப்பேன். ஆனால் அதற்க்கானச் சூழல் அமைவது குதிரை கொம்பாகவே இருந்தது.
சவூதி அரேபியாவில் நான் பணி செய்தப் பிராஜக்டை நல்ல படியாக முடித்துவிட்டு ஊருக்கு வந்தேன். ஊரில் அண்ணனின் திருமணம். அதற்கான வேலையில் பிஸியாக இருந்தேன். இரண்டு மாதம் எப்படி போனது என்று தெரியவில்லை. சவூதியில் இருக்கும் போதே, இந்தப் பிராஜக்ட் முடித்தவுடன் நம்ம டீமில் உள்ள அனைவரும் ஒரு அவுட்டிங் பிளான் பண்ணலாம் என்று மேனேஜர் சொல்லியிருந்தார். அதன்படி கேரளா சுற்றுப்பயணம் ஒரு வாரம். பயணம் நிறைவாய் இருந்தது.
கடந்த ஒன்பது வருடங்களாய் வேலையின் நிமித்தம் வெளியூர்களில் இருந்து வருகிறேன். ஊருக்கு விடுமுறையில் அவ்வப்போது சென்று வருவேன். அதிகபட்சமாக பத்து நாட்கள் தான் ஊரில் இருப்பேன். ஆனால் இந்த விடுமுறையில் தான் அதிக நாட்கள்(மூன்று மாதம்) ஊரில் இருந்தது.
ஊரில் அதிக நாட்கள் இருந்ததினால் பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் இல்ல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமுடிந்தது. என்னைப்போல் வெளியூர்களில் இருப்பவர்கள் அதிகமகாக விடுமுறையில் எங்கள் ஊருக்கு வருவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதமாகதான் இருக்கும். இந்தமாதங்களில் தான் பண்டிகைகள்(கிறிஸ்மஸ், பொங்கல், கோவில் திருவிழா) அதிகம். எனவே என்னுடன் படித்த பால்ய நண்பர்கள் பலரை சந்திக்க முடிந்தது. என்னவொரு ஆச்சரியம்!!.. பலருக்கு திருமணம் ஆகி இருந்தது. :-)
சவூதியில் நான் இருக்கும் போதே, நீங்கள் அடுத்து மஸ்கட் தான் வருவீர்கள் என்று என்னுடைய மேனேஜர் சொல்லியிருந்தார். அதன்படி ஊருக்கு வந்தவுடன் என்னை மஸ்கட் அனுப்புவதற்க்கானவேலையை என்னுடைய ஹைதிராபாத் ஆபிஸ் தொடங்கியது. விசா தொடர்பான எல்லா வேலைகளையும், மெடிக்கலையும் முடித்து ஒரு வழியாக கடந்தமாதம் பனிரென்டாம் தேதி மஸ்கட் வந்து சேர்ந்தேன்.
புதிய நாடு
புதிய வீடு
புதிய அலுவலகம்
புதிய மக்கள்
என்று எல்லாவத்தையும் சமாளித்து செட்டில் ஆக ஒரு மாதம் பிடித்துவிட்டது.....
இங்கு வந்தவுடம் முதலில் தடுமாறியது பணத்தில் தான், காரணம் சவூதியில் உள்ள ஒரு ரியாலின்(SAR) மதிப்பை விட இங்குள்ள ரியாலின்(OMR) மதிப்பு பத்து மடங்கு அதிகம்!!!..
சவூதி 1 ரியால் = 11.8 இந்தியன் ரூபாய்
ஓமன் 1 ரியால் = 118.0 இந்தியன் ரூபாய்
குறிப்பு: இந்த கடையும் திறக்கும் என்ற நம்பிக்கையில் கழன்று போகாத அனைத்து பாலோவருக்கும் என்னுடைய நன்றி.... :-)
தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.. பார்ப்போம்..
பதிவு எழுதுவதற்கு ரெம்ப நாட்கள் விடுமுறை கொடுத்தாயிற்று. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என நினைப்பேன். ஆனால் அதற்க்கானச் சூழல் அமைவது குதிரை கொம்பாகவே இருந்தது.
சவூதி அரேபியாவில் நான் பணி செய்தப் பிராஜக்டை நல்ல படியாக முடித்துவிட்டு ஊருக்கு வந்தேன். ஊரில் அண்ணனின் திருமணம். அதற்கான வேலையில் பிஸியாக இருந்தேன். இரண்டு மாதம் எப்படி போனது என்று தெரியவில்லை. சவூதியில் இருக்கும் போதே, இந்தப் பிராஜக்ட் முடித்தவுடன் நம்ம டீமில் உள்ள அனைவரும் ஒரு அவுட்டிங் பிளான் பண்ணலாம் என்று மேனேஜர் சொல்லியிருந்தார். அதன்படி கேரளா சுற்றுப்பயணம் ஒரு வாரம். பயணம் நிறைவாய் இருந்தது.
கடந்த ஒன்பது வருடங்களாய் வேலையின் நிமித்தம் வெளியூர்களில் இருந்து வருகிறேன். ஊருக்கு விடுமுறையில் அவ்வப்போது சென்று வருவேன். அதிகபட்சமாக பத்து நாட்கள் தான் ஊரில் இருப்பேன். ஆனால் இந்த விடுமுறையில் தான் அதிக நாட்கள்(மூன்று மாதம்) ஊரில் இருந்தது.
ஊரில் அதிக நாட்கள் இருந்ததினால் பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் இல்ல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமுடிந்தது. என்னைப்போல் வெளியூர்களில் இருப்பவர்கள் அதிகமகாக விடுமுறையில் எங்கள் ஊருக்கு வருவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதமாகதான் இருக்கும். இந்தமாதங்களில் தான் பண்டிகைகள்(கிறிஸ்மஸ், பொங்கல், கோவில் திருவிழா) அதிகம். எனவே என்னுடன் படித்த பால்ய நண்பர்கள் பலரை சந்திக்க முடிந்தது. என்னவொரு ஆச்சரியம்!!.. பலருக்கு திருமணம் ஆகி இருந்தது. :-)
சவூதியில் நான் இருக்கும் போதே, நீங்கள் அடுத்து மஸ்கட் தான் வருவீர்கள் என்று என்னுடைய மேனேஜர் சொல்லியிருந்தார். அதன்படி ஊருக்கு வந்தவுடன் என்னை மஸ்கட் அனுப்புவதற்க்கானவேலையை என்னுடைய ஹைதிராபாத் ஆபிஸ் தொடங்கியது. விசா தொடர்பான எல்லா வேலைகளையும், மெடிக்கலையும் முடித்து ஒரு வழியாக கடந்தமாதம் பனிரென்டாம் தேதி மஸ்கட் வந்து சேர்ந்தேன்.
புதிய நாடு
புதிய வீடு
புதிய அலுவலகம்
புதிய மக்கள்
என்று எல்லாவத்தையும் சமாளித்து செட்டில் ஆக ஒரு மாதம் பிடித்துவிட்டது.....
இங்கு வந்தவுடம் முதலில் தடுமாறியது பணத்தில் தான், காரணம் சவூதியில் உள்ள ஒரு ரியாலின்(SAR) மதிப்பை விட இங்குள்ள ரியாலின்(OMR) மதிப்பு பத்து மடங்கு அதிகம்!!!..
சவூதி 1 ரியால் = 11.8 இந்தியன் ரூபாய்
ஓமன் 1 ரியால் = 118.0 இந்தியன் ரூபாய்
குறிப்பு: இந்த கடையும் திறக்கும் என்ற நம்பிக்கையில் கழன்று போகாத அனைத்து பாலோவருக்கும் என்னுடைய நன்றி.... :-)
தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.. பார்ப்போம்..
Posted by
நாடோடி
at
3:21 PM
15
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
அனுபவம்
Subscribe to:
Posts (Atom)