Wednesday, October 13, 2010

ப‌திவுல‌கில் அதிமேதாவி ஆக‌ வேண்டுமா?..

1) ப‌திவு எழுதுப‌வ‌ர்க‌ளில் யாருக்கெல்லாம் பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும், எப்ப‌டி போட‌ வேண்டும் என்ப‌தை நீங்க‌ள் தான் முடிவு செய்வீர்க‌ளானால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி..

2) எப்போதும் ஒரு கூட்ட‌த்தை த‌ன்னிட‌ம் வைத்து கொண்டு, ஒவ்வொரு ப‌திவுக‌ளாக‌ சென்று கெட்ட‌ வார்த்தைக‌ளால் வாந்தியெடுக்க‌ தெரிந்தால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி..

3) அதிலும் குறிப்பாக‌ ப‌திவுக‌ளில் தான் வாந்தியெடுத்த‌து போதாது என்று, வ‌ழியில் போகிற‌வ‌னையும் பிடித்து வ‌ந்து வாந்தியெடுக்க‌ வைப்பேன் என்று சொல்வீர்க‌ளானால் நீங்க‌ள் தான் சூப்ப‌ர் அதிமேதாவி..

4) ப‌திவுக‌ளில் வாந்தியெடுப்ப‌வ‌ர்களை, ஏன் இப்ப‌டி வ‌ந்து வாந்தியெடுக்கிறாய் என்றால், உல‌கில் இதுவ‌ரை வாந்தியெடுத்த‌வ‌ர்க‌ளில் லிஸ்டை கையில் வைத்து கொண்டு இவ‌ர்க‌ளையெல்லாம் நீ கேட்க‌வில்லை, அப்ப‌டியானால் என்னை ம‌ட்டும் ஏன் கேட்கிறார் என்று கேட்பீர்க‌ளானால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி..

5) உங்க‌ளின் ப‌திவில் உள்ள‌ த‌வ‌றை ஒருவ‌ர் சுட்டி காட்டுகிறார், அது ச‌ரியாக‌ ப‌டுகிற‌து. ஆனால் அதை இவ‌ன் எப்ப‌டி கேட்க‌லாம் என்று, சுட்டிக்காட்டிய‌ ந‌ப‌ரின் முந்த‌யை காமெடி ப‌திவின் ஒரு வ‌ரியை எடுத்துக் கொண்டு ப‌ஸ்ஸில் ஒட்டி ஊர் ஊராக‌ சென்று உங்க‌ளை நீங்க‌ளே அசிங்க‌ ப‌டுத்தி கொள்வீர்க‌ளானால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி...

6) த‌ன்னுடைய‌ ஒரு ப‌திவில் த‌வ‌று செய்துவிட்டு, அந்த‌ த‌வ‌றை ப‌ற்றி அந்த‌ ப‌திவில் கேள்விக‌ள் வைத்தால் அத‌ற்கு ப‌தில் சொல்லாம‌ல், த‌ன்னுடைய‌ மேதாவி கும்ப‌ல் கூட்ட‌மாக‌ இருக்கும் இட‌த்தில் கூட்டி வைத்து கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுக்க‌ வைத்தால் நீங்க‌ள் தான் அதிமேதாவி..

7) குறிப்பாக‌ ந‌ன்றாக‌ ப‌திவு எழுதி கொண்டிருப‌வ‌ர்க‌ளை ப‌ற்றி புனைவு எழுத‌ தெரிந்திருக்க‌ வேண்டும், அந்த‌ புனைவில் த‌ன்னுடைய‌ க‌ற்ப‌னை குதிரையை ஓட‌ விட‌க்கூடாது, ப‌ற‌க்க‌விட‌ வேண்டும்.. அப்ப‌டி செய்தால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி...

8) புனைவை எழுதிவிட்டு அத‌ற்கு ச‌ரித்திர‌ கால‌த்தில் இருந்து விள‌க்க‌ம் கொடுக்க‌ தெரிந்திருக்க‌ வேண்டும். அப்ப‌டி விள‌க்க‌ம் கொடுக்க‌ உங்க‌ளுக்கு தெரியுமானால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி...

9) விவாத‌ம் செய்யும் போது கெட்ட‌ வார்த்தையால் வாந்தியெடுக்க‌ உங்க‌ளுக்கு தெரிந்தால் நீங்க‌ள் அதிமேதாவி.. ஆனால் அந்த‌ கெட்ட‌ வார்த்தைக்கும், "கோப‌த்தில் பேசிவிட்டேன்" என்று விள‌க்க‌ம் கொடுக்க‌ நீங்க‌ள் த‌யாராக‌ இருந்தால் நீங்க‌ள் தான் மெகா அதிமேதாவி...(ஒரு வேளை கோப‌த்தில் சாப்பிடும் போது சோறுக்கு ப‌தில் வேறு ஏதாவ‌து சாப்பிடுவார்க‌ளோ)

10) அடுத்த‌வ‌ர்க‌ள் மீது க‌ல்லெறிந்து விளையாடுவ‌து போல், ப‌திவு எழுதி காய‌ப்ப‌டுத்துவீர்க‌ளானால் நீங்க‌ள் தான் அதிமேதாவி.. இப்ப‌டி க‌ல்லெறிந்து விளையாடும் கூட்ட‌திற்கு நீங்க‌ளும் சென்று ஊக்க‌ப்ப‌டுத்தினால் நீங்க‌ள் ராய‌ல் அதிமேதாவி.. இப்ப‌டி அவ‌ர்க‌ளை ஊக்க‌ ப‌டுத்தாவிட்டால் நீங்க‌ள் தான் அடிமுட்டாள் ப‌திவ‌ர்.. :)

# எல்லாம் சொல்லிவிட்டு இதை சொல்லாம‌ல் போனால் எப்ப‌டி?... வித‌வித‌மா ம‌ன்னிப்பு கேட்க‌ தெரிய‌ வேண்டும்.. அப்ப‌டி தெரிந்தா நீங்க‌ள் தான் அதிமேதாவி..

நான் அடிமுட்டாள் ப‌திவ‌ராக‌ இருக்க‌ விருப்ப‌ப‌டுகிறேன், அப்ப‌ நீங்க‌ எப்ப‌டினு சொன்னீங்க‌னாதான் தெரியும்... :))))

குறிப்பு: இத‌ற்கு செய்வினை, செய‌ப்பாட்டுவினைக‌ள் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌..

46 comments:

எல் கே said...

en nallathana poitu irunduchi

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe superb

நாடோடி said...

@LK said...
//en nallathana poitu irunduchi //

ஒண்ணும் பிர‌ச்ச‌னை இல்லை கார்த்திக்.. ந‌ம‌க்கு தெரிந்த‌வைக‌ளை, சில‌ருக்கு சொல்லி எச்ச‌ரிக்க‌லாம் என்று தான்..

நாடோடி said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//hehe superb //

வாங்க‌ ர‌மேஷ்.. என‌க்கு தெரியும் நீங்க‌ என்னை போல‌ முட்டாளா இருக்க‌ தான் ஆசைப‌டுவீங்க‌.. :)))))))

Prathap Kumar S. said...

பதிவுலகத்துல மட்டுமில்லை ஸ்டீபன்... நிஜ உலகத்துலயும் ஒரு முட்டாள்தான்...

அஹமது இர்ஷாத் said...

நான் அடிமுட்டாள் ப‌திவ‌ராக‌ இருக்க‌ விருப்ப‌ப‌டுகிறேன்//

Same Blood Stephen..

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//பதிவுலகத்துல மட்டுமில்லை ஸ்டீபன்... நிஜ உலகத்துலயும் ஒரு முட்டாள்தான்... //

வாங்க‌ த‌ல‌, இப்ப‌டி ந‌ம்ம‌ளை ப‌ற்றிய‌ உண்மையை எல்லாம் பொசுக்குனு சொல்லிட‌ கூடாது... :)))))

நாடோடி said...

@அஹமது இர்ஷாத் said...
நான் அடிமுட்டாள் ப‌திவ‌ராக‌ இருக்க‌ விருப்ப‌ப‌டுகிறேன்//

Same Blood Stephen.. //

என்ன‌ இர்ஷாத், ரெம்ப‌ அனுப‌வ‌மா?.. முன்னாடியே சொல்லுற‌து இல்லையா?.. :))

Prathap Kumar S. said...

பதிவுலகத்துல மட்டுமில்லை ஸ்டீபன்... நிஜ உலகத்துலயும் ஒரு முட்டாள்தான்...:))

சைவகொத்துப்பரோட்டா said...

என்ன ஆச்சு, ஸ்டீபனுக்கு கோபம் போல இருக்கே :))

நாடோடி said...

@சைவகொத்துப்பரோட்டா said...
//என்ன ஆச்சு, ஸ்டீபனுக்கு கோபம் போல இருக்கே :)) //

வாங்க‌ சை.கொ.ப‌.. சும்மா காமெடியா போட்ட‌து, பாருங்க‌ க‌டைசில‌ ஸ்மைலி போட்டியிருக்கிறேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாச்சு பாஸ்...

சரி.. சொல்லுங்க.. எங்க..எப்போ.. எப்படி போய் வாந்தி எடுக்கனுமுனு...

நானும் வாந்தி எடுத்து ரொம்ப நாளாச்சி.. ஹி..ஹி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரொம்ப வெறுப்பாயீட்டீங்க போல.....

நாடோடி said...

@பட்டாபட்டி.. said...
//என்னாச்சு பாஸ்...

சரி.. சொல்லுங்க.. எங்க..எப்போ.. எப்படி போய் வாந்தி எடுக்கனுமுனு...

நானும் வாந்தி எடுத்து ரொம்ப நாளாச்சி.. ஹி..ஹி.. //

வாங்க‌ ப‌ட்டா ந‌ண்ப‌ரே...

உங்க‌ளைத்தான் எதிர்பார்த்தேன்... துப்பி துப்பி நான் சின்ன‌ வ‌ய‌சுல‌ விளையாடுவோமே... அது போல‌ வாந்தியெடுத்து விளையாட‌ ஒரு கூட்ட‌ம் இப்ப‌ இருக்கு.. :))

நாடோடி said...

@பட்டாபட்டி.. said...
//ரொம்ப வெறுப்பாயீட்டீங்க போல.....//

ஆமாங்க‌ ... சும்மா போகிற‌வ‌னையும் சொறிஞ்சி விடுவேனு சொல்லுகிற‌ ஒரு கும்ப‌லுக்கிட்ட‌ மாட்டிட்டேன்.. ;)

Asiya Omar said...

ஸ்டீபன் ரொம்ப நாள் பதிவே போடலையேன்னு பார்க்க வந்தால் இங்கே சூப்பர் பகிர்வு.அருமை.உஷார் படுத்தியமைக்கு நன்றி.நானும் இர்ஷாத் சொன்னதையே வழிமொழிகிறேன்.

நாடோடி said...

@asiya omar said...
//ஸ்டீபன் ரொம்ப நாள் பதிவே போடலையேன்னு பார்க்க வந்தால் இங்கே சூப்பர் பகிர்வு.அருமை.உஷார் படுத்தியமைக்கு நன்றி.நானும் இர்ஷாத் சொன்னதையே வழிமொழிகிறேன். //

வாங்க‌ ச‌கோ.. ரெம்ப‌ சுதாரிப்பா இருந்திருக்குங்க‌, ஏதோ என்னால‌ முடிஞ்ச‌து.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.. :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப கோவமா இருக்கீங்க போலிருக்கு... நான் கொஞ்சம் லேட்டா வரேன்..

நாடோடி said...

@வெறும்பய said...
//ரொம்ப கோவமா இருக்கீங்க போலிருக்கு... நான் கொஞ்சம் லேட்டா வரேன்.. //

வாங்க‌ வெறும்ப‌ய‌ ந‌ண்ப‌ரே.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை.. நாம‌ எப்ப‌வும் போல‌ எழுத‌ வேண்டிய‌து தான்.. சில‌ நிற‌க்குருடுக‌ளிட‌ம் இருந்து த‌ள்ளி இருப்ப‌து ந‌ல்ல‌து அல்ல‌வா.. :)))

வால்பையன் said...

அப்பாலிக்கா வர்றேன் தல!

Riyas said...

என்ன ஸ்டீபன் மேதாவி அதிமேதாவின்னு ஒரு பாடமே நடத்திட்டிங்க..

தமிழ் உதயம் said...

யாரும் சங்கடப்படுத்திட்டாங்களா நாடோடி

நாடோடி said...

@வால்பையன் said...
//அப்பாலிக்கா வர்றேன் தல! //

வாங்க‌ த‌ல‌.. க‌ண்டிப்பா அப்புற‌ம் வ‌ர‌னும்..:)

நாடோடி said...

@Riyas said...
//என்ன ஸ்டீபன் மேதாவி அதிமேதாவின்னு ஒரு பாடமே நடத்திட்டிங்க.. //

வாங்க‌ ரியாஸ்‌.. சும்மா ம‌க்க‌ளுக்கு ஒரு விழிப்புண‌ர்வு கொடுக்க‌லாமுனு தான்.. :)

நாடோடி said...

@தமிழ் உதயம் said...
//யாரும் சங்கடப்படுத்திட்டாங்களா நாடோடி ///

வாங்க‌ த‌மிழ் சார்.. அடுத்த‌வ‌னை கூறுப்போட்டு பார்ப்ப‌தில் ப‌ல‌ருக்கு ச‌ந்தோச‌ம் தானே.. என்ன‌ செய்வ‌து.. :)

enthiran said...

// எப்போதும் ஒரு கூட்ட‌த்தை த‌ன்னிட‌ம் வைத்து கொண்டு, ஒவ்வொரு ப‌திவுக‌ளாக‌ சென்று கெட்ட‌ வார்த்தைக‌ளால் வாந்தியெடுக்க‌ தெரிந்தால் நீங்க‌ள் தான் அந்த‌ அதிமேதாவி..//

ஒதுங்கி போறதால வளர்ந்திடுறானுங்க ..

பிரச்னை என்னன்னு புரியல..

ஆனா இப்படி மேதாவிங்க இருக்காங்கன்னு புரியுது..

enthiran said...

//அடுத்த‌வ‌ர்க‌ள் மீது க‌ல்லெறிந்து விளையாடுவ‌து போல், ப‌திவு எழுதி காய‌ப்ப‌டுத்துவீர்க‌ளானால் நீங்க‌ள் தான் அதிமேதாவி..//


தமிழனுக்கு பிடித்த பொழுதுபோக்கு,.,.

நாடோடி said...

@Nermai mattum said...

//ஒதுங்கி போறதால வளர்ந்திடுறானுங்க ..

பிரச்னை என்னன்னு புரியல..

ஆனா இப்படி மேதாவிங்க இருக்காங்கன்னு புரியுது.. //

வாங்க‌ நேர்மை ம‌ட்டும்.. ஆமாங்க‌... பெரிய‌ பெரிய‌ மேதாவிக‌ள் எல்லாம் இந்த‌ ப‌திவுல‌க‌த்தில் இருக்காங்க‌.. நீங்க‌ புதுசா.. புரிஞ்சி சூதான‌மா ந‌ட‌ந்துக்குங்க‌... :)

விஷாலி said...

ஆக அரசியல் தெரிந்தால் மட்டுமே பதிவுலகில் காலம் கடத்த முடியும் என்று நினைகிறேன். உங்கள் கருத்துகள் அடிபடையில் ஒரு போட்டியே வைக்கலாம் - அது எத்தணை முறை வாந்தி எடுக்க வேண்டும் என்பது.

Radhakrishnan said...

முட்டாள் தன்னை ஒருபோதும் முட்டாள் என ஒப்புக் கொள்வதில்லை. ;)

நீங்கள் அப்படி ஒப்புக் கொண்டதினால் நீங்களும் அதிமேதாவியாக இருக்கக் கூடும் என அச்சப்படுகிறேன்.

Anonymous said...

ஹ.. அது ஒரு வெத்துவேட்டு..

ஆட்டம் ரொம்பத்தான் கவனிச்சுட்டுத்தான் இருக்கோம்..அந்த கூட்டத்தை நாடோடி..

இருக்கு அவனுக்கு..

Anonymous said...

I have never seen such posts in your blog.

what happened?.

Only tamil blog community is worse as I have seen..

ரங்கா said...

கொழுப்பெடுத்து திரியும்போதே நெனச்சேன் வசமா மாட்டுவான் னு..


எத்தனை நாள்தான் ஆடுவானுங்க...

ஆப்பு வெச்சா சரி.

enthiran said...

செத்த பயலுகள கண்டுக்காதீங்க ஸ்டீபன்..

லூஸு அவனும் அவன ஆட வைக்கிறவனுங்களும்..

குழுமமா நடத்துறாங்க.. நீங்க சொன்னீங்கன்னு வந்தேன்..

வெறுத்துட்டேன் ஸ்டீபன்...

சினிமா விளம்பரம் மாதிரி..

எப்ப ஊருக்கு.. போகும்போது சொல்லுங்க.. ஒரு விசயம் சொல்லணும்..

சிங்கக்குட்டி said...

இது எதுக்கு?

ஏதாவது திடீர்னு செய்றதா இருந்தா சொல்லீட்டு செய்ங்கப்பா திக்கு திக்குன்னு இருக்கு :-)

//நான் அடிமுட்டாள் ப‌திவ‌ராக‌ இருக்க‌ விருப்ப‌ப‌டுகிறேன்//

:-) :-) :-) ஆனா கடைசி வரை "அந்த" மேதாவி யாருன்னு சொல்லவேவேவேவேயில்ல :-) ?

Anisha Yunus said...

எனக்கு என்னன்னே புரியல. ஏதோ கோபம்னு தெரியுது, யார்மேல, என்னன்னும் புரியலை. ஏன் நம்ம தமிழ் பதிவுலகில் மட்டும் இப்படி?
:((

சாந்தி மாரியப்பன் said...

என்னாதிது ?????????.

வால்பையன் said...

படிச்சிட்டேன், நான் ஒரு வடிகட்டிய முட்டாள்னு தெரிஞ்சிகிட்டேன் தல!

Anonymous said...

அர்விந்தும் , முகிலனும் அந்தம்மாவை புனைவு எழுதினோம்னு ஒத்துகிட்டப்பவே அதை முடிச்சுருக்கணும் குழுமத்தில்..

இப்ப மதார் என்ற பெண் அவனுகளுக்கெல்லாம் மேல ரவுடித்தனமா குழுமத்துல பேசுவதும் பதிவு போடுவதும் ... சீ..சீ..

அவங்க மூவரை பற்றியும் உங்களையும் எல்லாருக்கும் தெரியும் ஸ்டீபன்..

கவலைப்படாதீங்க ஸ்டீபன்...

Anonymous said...

போரமா! போர் நடக்கிற இடமா? - Tamilbloggers Forum

http://sirippupolice.blogspot.com/2010/10/tamilbloggers-forum.html

இதை படித்தால் அந்த குழுமத்தில் நடக்கும் கூத்து புரியும்..

சினிமா காரங்க குழுமம் நடத்துனா இப்படித்தான்...

அவங்க குழுமம் நடத்துற காரணமே வேற..


:)))))))))))) ஒஹ்ஹோஹோ.. ஆஹாஹ்ஹா

Anonymous said...

பிஞ்ச செருப்பால அடிப்பேன் னு உங்கள சொல்லியிருக்கான் ஸ்டீபன்..

அந்த பயல நேர்ல வர சொல்லுங்க என்கிட்ட பிய்யாத செருப்பே நிறைய இருக்கு...

enthiran said...

From: aravind

Date: 2010/10/11


ayya sombu thooki stephen

ini engayaavathu pesu pinja seruppaalaye unnai adikkirendaa paadu


en naan address thanthaa en veettukku vanthu sombu thookuviyaadaa badu

endaa unakkum oru thadavai sonna puriyaathaa.address thaa.neengalum aal vaichu thaane kosham poduveenga.athe paaniyil un sombai naan udaikiren.ithaiyum anga poi solli alu.


saridaa sombu thooki..ini engavaathu pombalaikku aatharavaa pesathe.nee pathilukku ethai ethirpaakkuranu theriyala

--------------------

இதான் காரணமா நாடோடி?.

பஸ் ல பார்த்தேன்...

கீழ்தரமான பேச்சு..

Unknown said...

நாடே அம்மணமா ஓடி'ட்டிருக்கு...
நாம கோவணம் கட்டியிருந்தா சிரிக்கத்தானே செய்யும்...
விடுங்க பாஸ்...

Anonymous said...

மாப்ள அந்த பயலுக்கு துணிச்சல் இருந்தா அவன் அட்ரஸ சொல்ல சொல்லு ...

ஜானகிராமன் said...

தேவையே இல்லாமல் உங்களை வம்புக்கு இழுத்தது மிகத் தவறான போக்கு. ஆனால், உங்களுடைய வலைப்பதிவில் இது போன்ற பதிவுகளை தவிர்த்திருக்கலாம். மிக அழகாக, வருபவருக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தரும் பதிவுகளுக்கு நடுவே இது துருத்திக்கொண்டு இருக்கிறது.

r.v.saravanan said...

நான் அடிமுட்டாள் ப‌திவ‌ராக‌ இருக்க‌ விருப்ப‌ப‌டுகிறேன்

நானும் அப்படியே

same blood

Related Posts with Thumbnails